நடப்பு ஐபிஎல் தொடரானது 10 அணிகளுக்கு இடையே மிகவும் கோலமாக தொடங்கியது. இதில், தற்போது அனைத்து அணிகளும் லீக் சுற்றுகளை விளையாடி முடிந்துள்ளதால், புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்துள்ள அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. அதாவது, குஜராத் (GT) 20 புள்ளிகள், CSK மற்றும் LSG தலா 17 புள்ளிகள் மற்றும் MI 16 புள்ளிகள் என முதல் 4 இடங்களை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளன.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்த தொடரின் பிளே ஆப் சுற்றுக்கான முதல் போட்டியில், குஜராத் அணிக்கு எதிராக CSK அணியும், 2வது போட்டியில் லக்னோ (LSG) அணிக்கு எதிராக மும்பை (MI) அணியும் சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் மோத உள்ளன. இந்த போட்டிகள் முறையை வரும் மே 23 மற்றும் 24 ம் தேதிகளில் நடைபெற இருக்கிறது. இதில், குஜராத் மற்றும் CSK அணிகளுக்கு இடையிலான போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெறும்.
ஆனால் இந்த போட்டியில் தோல்வி அடையும் அணி, LSG மற்றும் MI அணிகளுக்கு இடையிலான போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு எதிராக வரும் மே 26ம் தேதி மோதும். இதில், வெற்றி அடையும் அணி முதல் பிளே போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு எதிராக வரும் மே 28ம் தேதி நடப்பு ஐபிஎல் சாம்பியன் பட்டத்திற்கான இறுதிப் போட்டியில் மோதும்.