இந்த சீசனுக்கான 74 போட்டியில் 53 ஆவது போட்டி இன்று (மே 8) கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் வைத்து நடைபெற இருக்கிறது. இந்த ஆட்டத்தில் நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதுவரை நடைபெற்ற 10 போட்டிகளில் விளையாடிய இவ்விரு அணிகளில் கொல்கத்தா 4 போட்டிகளிலும் பஞ்சாப் அணி 5 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இப்போது, சரியாக 7.30 மணியளவில் துவங்க இருக்கும் இந்த போட்டிக்கான டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.
இந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணியின் சார்பில் பிரப்சிம்ரன் சிங் மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் களமிறங்கியுள்ளனர். இதில் வெற்றி பெறும் அணி 2 புள்ளிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலில் அடுத்த இடத்தைப் பெறும் என்பது கவனிக்கத்தக்கது.