ஐபிஎல் தொடரின் 16 வது சீசனுக்கான துவக்க விழாவில், இந்தியாவின் முக்கிய நட்சத்திரங்கள் பங்கு பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஐபிஎல்:
இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 16 வது சீசன் நாளை மறுநாள் (31ம் தேதி) முதல் 10 அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கிறது. கடந்த இரு வருடங்களுக்கு மேல் இந்தியாவில் முழுமையாக நடைபெறாத இந்த ஐபிஎல், தொடர், நடப்பு வருடம் அனைத்து போட்டிகளும் இந்தியாவிலேயே நடைபெற இருப்பதால், ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்பார்ப்பு நிலவி உள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
மேலும், கடந்த இரு சீசன்களுக்கும், கொரோனா தொற்று காரணமாக ஐபிஎல் தொடர்பான துவக்க (கலை) நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறாமல் இருந்தது. தற்போது, ஐபிஎல் தொடரின் 16 சீசன் முழுவதும் இந்தியாவில் நடைபெற உள்ளதால், கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக கொண்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. அதாவது, வரும் 31ம் தேதி தொடங்க உள்ள ஐபிஎல்லில் முதல் போட்டியாக CSK அணியை எதிர்த்து, குஜராத் அணி அகமதாபாத்தில் இரவு 7.30 மணிக்கு மோத உள்ளது.
இந்த போட்டி தொடங்குவதற்கு முன்பு, 6 மணி அளவில் தொடக்க விழாவை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், இந்திய பிரபலங்களான ராஷ்மிகா மந்தனா, தமன்னா பாட்டியா, டைகர் ஷெராஃப், கத்ரீனா கைஃப் மற்றும் அரிஜித் சிங் உள்ளிட்டோர் ஐபிஎல் விழாவை அலங்கரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Join @tamannaahspeaks in the incredible #TATAIPL Opening Ceremony as we celebrate the biggest cricket festival at the biggest cricket stadium in the world – Narendra Modi Stadium! ?️ ?
31st March, 2023 – 6 PM IST on @StarSportsIndia & @JioCinema
Make sure to tune in & join! ? pic.twitter.com/u9HtOcD9tm
— IndianPremierLeague (@IPL) March 29, 2023