கோலாகலமாக தொடங்க உள்ள ஐபிஎல் திருவிழா…, அலங்கரிக்க தயாராகும் இந்திய நட்சத்திரங்கள்!!

0
கோலாகலமாக தொடங்க உள்ள ஐபிஎல் திருவிழா..., அலங்கரிக்க தயாராகும் இந்திய நட்சத்திரங்கள்!!
கோலாகலமாக தொடங்க உள்ள ஐபிஎல் திருவிழா..., அலங்கரிக்க தயாராகும் இந்திய நட்சத்திரங்கள்!!

ஐபிஎல் தொடரின் 16 வது சீசனுக்கான துவக்க விழாவில், இந்தியாவின் முக்கிய நட்சத்திரங்கள் பங்கு பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஐபிஎல்:

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 16 வது சீசன் நாளை மறுநாள் (31ம் தேதி) முதல் 10 அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கிறது. கடந்த இரு வருடங்களுக்கு மேல் இந்தியாவில் முழுமையாக நடைபெறாத இந்த ஐபிஎல், தொடர், நடப்பு வருடம் அனைத்து போட்டிகளும் இந்தியாவிலேயே நடைபெற இருப்பதால், ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்பார்ப்பு நிலவி உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

மேலும், கடந்த இரு சீசன்களுக்கும், கொரோனா தொற்று காரணமாக ஐபிஎல் தொடர்பான துவக்க (கலை) நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறாமல் இருந்தது. தற்போது, ஐபிஎல் தொடரின் 16 சீசன் முழுவதும் இந்தியாவில் நடைபெற உள்ளதால், கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக கொண்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. அதாவது, வரும் 31ம் தேதி தொடங்க உள்ள ஐபிஎல்லில் முதல் போட்டியாக CSK அணியை எதிர்த்து, குஜராத் அணி அகமதாபாத்தில் இரவு 7.30 மணிக்கு மோத உள்ளது.

குழந்தை கிடைக்காததால் தூக்கிட்ட அர்ச்சனா.., சந்தியாவின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?? அனல் பறக்கும் ராஜா ராணி 2!!!

இந்த போட்டி தொடங்குவதற்கு முன்பு, 6 மணி அளவில் தொடக்க விழாவை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், இந்திய பிரபலங்களான ராஷ்மிகா மந்தனா, தமன்னா பாட்டியா, டைகர் ஷெராஃப், கத்ரீனா கைஃப் மற்றும் அரிஜித் சிங் உள்ளிட்டோர் ஐபிஎல் விழாவை அலங்கரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here