இந்தியன் பிரீமியர் லீக்கின் இரண்டாவது எலிமினேட்டர் சுற்று இன்று (மே 26) அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் வைத்து நடைபெற இருக்கிறது. இதற்கு முன்னதாக நடைபெற்ற குவாலிபையர் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் தோற்ற குஜராத் டைட்டன்ஸ் அணி, எலிமினேட்டர் சுற்றில் லக்னோவை தோற்கடித்த மும்பை இந்தியன்ஸ் அணியை சந்திக்கிறது.
இப்போது, இன்று நடைபெற இருக்கும் முக்கியமான போட்டியில் இந்த இரு அணிகளும் நேருக்கு நேர் மோதுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்குள் நுழையும். இப்போது, துவங்கியுள்ள இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்துள்ளது.
அடேய்.., மாப்பிள்ளைனு நெனச்சா துரோகியா இருந்து இருக்க.., அர்ஜுனை பற்றி அறியும் நடேசன்!!
அந்த வகையில், குஜராத் டைட்டன்ஸ் அணியின் சார்பாக விருத்திமான் சாஹா மற்றும் சுப்மான் கில் இருவரும் மைதானத்திற்குள் களமிறங்கியுள்ளனர். மழை காரணமாக சற்று தாமதமாக துவங்கியுள்ள இந்த போட்டியில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் அணி அதிகபட்சமாக வெற்றி பெறுவதற்கு வாய்ப்புள்ளதாக கணிப்புகள் எழுந்துள்ளது.