இந்திய ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த இந்த ஆண்டு IPL சீசன் மார்ச் மாதம் இறுதியில் தொடங்க உள்ளது. இந்த சீசனில் IPL கோப்பையை தட்டிச் செல்வதற்காக அனைத்து அணிகளும் கடுமையான பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி அனைத்து போட்டிகளிலும் தொடர் தோல்விகளை சந்தித்து கடைசி இடத்தை பிடித்து வெளியேறியது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதனால் இந்த சீசனில் எப்படியாவது இறுதிப்போட்டிக்கு நுழைய வேண்டும் என வீரர்கள், பயிற்சியாளர்கள் என அனைவரையும் தேர்ந்தெடுத்தனர். இப்படி இருக்கையில் இப்போது இந்த அணியில் இருந்து முக்கிய வீரர் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்த ஆண்டு சீசனுக்காக அணியில் தேர்வாகிய நட்சத்திர வீரர் ஜெய் ரிச்சர்ட்சனுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக இவர் வரவிருக்கும் IPL சீசனில் MI அணிக்காக விளையாடுவது கேள்விக்குறியாகியுள்ளது. போட்டியின் தொடக்கத்திலே MI அணிக்கு இது போன்று சிக்கல் ஏற்பட்டுள்ளது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. மேலும் அனைத்து சவால்களையும் கடந்து மும்பை அணி IPL இறுதிப்போட்டிக்குள் நுழையுமா?? என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.