2023 ம் ஆண்டில் நடைபெறும் IPL 16 வது சீசனுக்கான ஏலம் வரும் டிசம்பர் மாதம் தொடங்க உள்ளதாக BCCI அறிவித்துள்ளது.
16 வது ஐபிஎல்
16 வது IPL கிரிக்கெட் திருவிழா அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதத்தில் தொடங்க உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்க உள்ளது. இந்த தொடருக்கான ஒவ்வொரு அணியிலும் குறைந்த பட்சம் 18 வீரர்கள் இடம் பிடிப்பார்கள். இதனால் திறமையான வீரர்களை தேர்வு செய்வதற்குள் அந்த அணி நிர்வாகிகளுக்கு போதும் போதும் என்றாகிவிடும்.
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
இதனால் அடுத்த ஆண்டு IPL சீசனுக்கான மினி ஏலம் இந்த ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி தொடங்க உள்ளது. இதற்கான அதிகாரபூர்வ தகவலை BCCI தற்போது வெளியிட்டுள்ளது. அதன் படி ஒவ்வொரு அணிகளும் வீரர்களை தேர்வு செய்வதற்காக ₹95 கோடி வரை செலவிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் எந்த அணியில் எந்த வீரர்கள் இடம்பெற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
கடைசி யுத்தம் இன்று தொடக்கம்.., செல்ஃபீயுடன் தனது பயணத்தை முடிக்க போகும் ரோஜர்.., !!
மேலும் கடந்த சீசனில் முதல் முறையாக IPL தொடரில் கால் பதித்த குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி வாகை சூடியது. இதற்கு காரணம் அந்த அணியில் திறமையான வீரர்கள் இடம் பிடித்ததால் தான். இதனால் இந்த ஆண்டு ஏலத்தில் திறமையான வீரர்களை தேர்வு செய்ய அணிகளுக்கிடையில் பிரச்சனை வந்தாலும் ஆச்சரிய பட வேண்டியதில்லை.