நட்சத்திர ஆல்ரவுண்டர் ஜடேஜா, சென்னை அணியில் தொடர்ந்து நீடிப்பார் என கேப்டன் தோனி கூறியுள்ளார்.
ரவீந்திர ஜடேஜா
IPL தொடரில் சென்னை அணியின் முக்கிய ஆல்ரவுண்டராக ஜடேஜா விளையாடி வந்தார். இதையடுத்து இவர் கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் CSK அணிக்கு கேப்டனாக களமிறங்கினார். ஆனால் இவர் தலைமையிலான சென்னை அணி போட்டிகளில் சிறப்பாக விளையாட வில்லை என அனைவரும் விமர்சனம் செய்தனர். இதனால் ஜடேஜா கேப்டன் பதவியை தோனியிடம் ஒப்படைத்து விட்டு IPL தொடரில் இருந்து விலகினார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதன் பிறகு இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் சென்னை அணி சம்பந்தப்பட்ட அனைத்து பதிவுகளையும் நீக்கினார். இது தவிர சென்னை அணி நிர்வாகமும் ஜடேஜாவை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்வதை நிறுத்தி விட்டனர். இதனால் இவர் அடுத்த ஆண்டு IPL தொடரில் CSK அணிக்காக விளையாடுவாரா?? என்ற கேள்வி அனைவரிடமும் நிலவி வந்தது.
இந்நிலையில் CSK அணியின் கேப்டன் தோனி இப்போது ஜடேஜா சென்னை அணிக்காக விளையாடுவார் என கூறியுள்ளார். இதை உறுதி படுத்துவது போல் சென்னை அணி நிர்வாகம் ஜடேஜாவை மினி ஏலத்தில் தக்க வைத்துக் கொள்ள போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. எனவே அடுத்த ஆண்டு IPL தொடரில் சென்னை அணிக்காக ஜடேஜா விளையாடுவாரா என பொறுத்திருந்து பார்க்கலாம்.