இந்தியாவில் நடைபெற்று வரும் IPL தொடருக்கான இறுதிப் போட்டி 28ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இப்போது பிளே ஆப் போட்டிகள் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. ஏற்கனவே CSK அணி முதல் பிளே ஆப் போட்டியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்து விட்டது. இதைத் தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் நாளை மூன்றாவது பிளே ஆப் போட்டியில் மோத உள்ளனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி CSK அணியுடன் போட்டியிடும் நிலையில் உள்ளது. இதனால் இந்த இரு அணிகளில் எந்த அணி வெற்றி பெறப் போகிறது என்று தெரியவில்லை. இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி நேற்றைய ஆட்டத்தில் லக்னோ அணியை வீழ்த்தி பலம் வாய்ந்த அணியாக உள்ளது. இன்னொரு பக்கம் குஜராத் அணி CSK அணியிடம் தோல்வியை தழுவி இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை தவறவிட்டது.
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ…LSG யை பதம் பார்த்த மும்பை – அடுத்த சுற்றுக்கு தகுதி….,
இதனால் நாளை நடைபெறும் போட்டியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு செல்லும் முனைப்பில் உள்ளது. இப்படி இருக்கும் சூழலில் நாளை நடைபெறும் அனல் பறக்கும் இந்த ஆட்டத்தில் எந்த அணி வெற்றி பெரும் என பொறுத்திருந்து பார்க்கலாம்.