நடப்பு ஐபிஎல் சீசன் எதிர்பார்க்காத திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் CSK அணியினர் 10வது முறையாக பைனலுக்கு முன்னேறி உள்ளனர். இந்த அணியுடன் பைனலில் விளையாட உள்ளது மும்பை அணியா? அல்லது குஜராத் அணியா? என நாளை நடைபெற உள்ள போட்டியின் முடிவில் தான் தெரியும்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதில் மும்பை அணி வெற்றி பெற்று பைனலில் CSK அணியுடன் மோதினால் போட்டி பரபரப்பாக இருக்கும் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் இந்த எதிர்பார்ப்புக்கு அதிர்வலையை ஏற்படுத்தும் விதமாக CSK அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் பிராவோ திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.
என்னப்பா சொல்றீங்க.., IPL இறுதிப்போட்டியில் தோனிக்கு விளையாட தடையா?? வெளியான ஷாக் தகவல் !!!!
அதாவது “நாளை நடைபெறவுள்ள போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்று CSK அணியுடன் பைனலில் விளையாடினால் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது. இதனால் மும்பை அணி பைனலுக்கு வர கூடாது என்பதே எனது தனிப்பட்ட விருப்பம்.” என தெரிவித்துள்ளார். இந்த தகவல் CSK அணி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.