நடப்பு ஆண்டிற்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டிகள் இன்று (மே 29) இறுதிப் போட்டியுடன் முடிவடைகிறது. நேற்று நடைபெற இருந்த IPL இறுதிப் போட்டி கனமழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் துவங்க இருக்கும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியை சந்திக்கிறது.
பிளே ஆப் போட்டியில் குஜராத்தை வீழ்த்தி முதல் அணியாக இறுதி சுற்றுக்கு தகுதியானது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. அதே போல, குவாலிபையர் 1 போட்டியில் தோல்வி பெற்ற குஜராத் அணி எலிமினேட்டர் சுற்றில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதியானது.
அரசியல் வேணும் தான்., ஆனா அதுக்கு பணம் வேணும்., புரிந்து கொண்ட விஜய் போட்ட மாஸ்டர் பிளான்!!
இப்போது, குஜராத் அணியை பொறுத்தமட்டில் சுப்மன் கில் நல்ல பார்மில் இருக்கிறார். மற்ற வீரர்களும் அந்த அணிக்கான வெற்றிக்கு தங்களது பங்களிப்பை கொடுத்து வருகின்றனர். அதே போல சென்னை அணியின் பவுலிங்கில் மதீஷா பத்திரானா அதிரடி காட்டி வருகிறார். இந்த இரு அணிகளும் இன்று நேருக்கு நேர் சந்திக்கும் போட்டியில் சென்னை அணி டாஸ் வென்று முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்துள்ளது.