இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 16 வது சீசனுக்கான இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் (GT) அணிகள் நேற்று (மே 28) மோத வேண்டி இருந்தது. ஆனால், போட்டி நடைபெற இருக்கும் குஜராத்தில் நேற்று பலத்த மழை பெய்ததால், டாஸ் கூட போட முடியாத நிலை ஏற்பட்டது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதனால் போட்டியானது ரிசர்வ் நாளில், அதாவது இன்று (மே 29) நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. CSK மற்றும் GT அணிகளுக்கு இடையிலான போட்டி, ஐபிஎல் தொடரின் 16 வது சீசனுக்கான பட்டத்தை வெல்ல கூடிய போட்டி என்பதால் தான் ரிசர்வ் நாளில் போட்டியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு வேளை போட்டி நடைபெற இருக்கும் இன்றும் மழை பெய்தால், புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்து இருக்கும் அணிக்கே ஐபிஎல் 16 வது சீசனுக்கான கோப்பை வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. அவ்வாறு வழங்கப்பட்டால், 20 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கும் குஜராத் அணியே சாம்பியன் பட்டத்தை தட்டி செல்லும். ஆனால், இதற்கு குறைந்தப்பட்சமே வாய்ப்பு உள்ளது. அதாவது, இன்று குஜராத்தில் வானம் மேகமூட்டத்துடன் இருக்குமே தவிர 8% தான் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.