சர்வதேச அணியில் இடம் பிடித்த CSKவின் குட்டி மலிங்கா…, ஒருநாள் போட்டியில் களமிறங்க திட்டம்!!

0
சர்வதேச அணியில் இடம் பிடித்த CSKவின் குட்டி மலிங்கா..., ஒருநாள் போட்டியில் களமிறங்க திட்டம்!!
சர்வதேச அணியில் இடம் பிடித்த CSKவின் குட்டி மலிங்கா..., ஒருநாள் போட்டியில் களமிறங்க திட்டம்!!

இந்தியாவின் மிகவும் பிரபலமான ஐபிஎல் தொடர் இதுவரை 16 சீசன்களை வெற்றிகரமாக கடந்து உள்ளது. இதில், 16 வது சீசனை சென்னை சூப்பர் கிங்ஸ் வென்று அதிக (5) முறை ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை அணியாக மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைந்து வலம் வருகிறது. இந்த ஐபிஎல் தொடரின் மூலம், பல இளம் வீரர்களின் திறமையை அடையாளம் கண்டு அவர்களுக்கு பிசிசிஐயானது சர்வதேச அணியில் வாய்ப்பு கொடுத்து வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதில், இந்திய வீரர்கள் அல்லாத வெளிநாட்டு வீரர்களும் தங்களது அசாத்திய திறமையை வெளிப்படுத்தி அவர்களது சர்வதேச அணியில் இடம் பெறுவதற்கான வாய்ப்பை பிரகாசமாகி வருகின்றனர். இந்த வகையில், CSK அணியின் முன்னணி பவுலராக மாறிய இலங்கையை சேர்ந்த மதீஷ பத்திரன நடந்து முடிந்த ஐபிஎல்லில் தனக்கு கிடைத்த வாய்ப்பை மிக கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டார்.

அதாவது, டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட்டான இவர் ஐபிஎல் 2023 இல் 12 போட்டிகளில் விளையாடி 19 விக்கெட்டுகளை கைப்பற்றி முக்கிய நேரத்தில் அணியின் வெற்றிக்கு கைகொடுத்தார். இவரது பவுலிங் ஸ்டைல் இலங்கையின் நட்சத்திர வீரரான மலிங்காவை போல் உள்ளதால் இவரை குட்டி மலிங்கா என்று ரசிகர்கள் செல்லமாக அழைத்து வருகின்றனர். ஐபிஎல் தொடரில் இவர் சிறப்பாக செயல்பட்டதன் மூலம், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கான சர்வதேச இலங்கை அணியில் இடம் பிடித்துள்ளார். இந்த போட்டியானது, வரும் ஜூன் 2, 4 மற்றும் 7 ஆம் தேதிகளில் நடைபெற இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here