வருகின்ற செப்டம்பர் 19ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவுள்ள ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரசிகர்களுக்கு அனுமதி:
நாடு முழுவதும் கொரோனா பரவலால் பொதுமக்கள் ஒரே இடங்களில் கூட தடை விதிக்கப்பட்டிருந்தது. மேலும், விளையாட்டு போட்டிகள் அனைத்தும் நிலையான கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் நடத்தப்பட வேண்டும் எனவும் அரசு அறிவித்திருந்தது. இதனால், கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக நடந்த கிரிக்கெட் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு போட்டிகளிலும் ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த மன வருத்தத்தில் காணப்பட்டனர்.
இதில், ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடர் கடந்த சில நாட்களுக்கு முன் இந்தியாவில் தொடங்கியது. இதில், போட்டிகள் நடந்து கொண்டிருக்கும் போது சில வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஐ.பி.எல். போட்டி ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்பின் ஐ.பி.எல். போட்டியின் எஞ்சிய ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19ம் தேதி நடைபெறும் என்று கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.
இந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கும் ஐ.பி.எல். போட்டியில் ரசிகர்களை அனுமதிப்பது தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியத்திடமும் ஐக்கிய அரபு அமீரகத்திடமும் ஆலோசனை கேட்கப்பட்டதாக அண்மையில் தகவல் வெளியானது. இதனை அடுத்து, வருகிற செப்டம்பர் 19ல் நடக்க உள்ள போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோத உள்ளதாகவும், அதில் ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதாகவும் உறுதி அளிக்கப்பட்டது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்