ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் செப்டம்பர் 19 தொடங்கி நவம்பர் 8 ந்தேதிவரை 51 நாட்கள் போட்டி நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஐ.பி.எல் 2020 தொடர்..!
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் வழக்கமாக மார்ச் மாதம் நடைபெறும் ஐ.பி.எல். தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா தொற்று ஓரளவிற்கு கட்டுக்குள் வந்துள்ளதால் போட்டியை எங்கள் நாட்டில் நடத்தலாம் என அந்நாட்டு அரசு விருப்பம் தெரிவித்தது. மேலும் ஐ.பி.எல். போட்டியை இலங்கையில் நடத்த இலங்கை அரசும் விருப்பம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் தற்போது ஐ.பி.எல். நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி இந்த ஆண்டிற்கான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. துபாய், அபுதாபி, ஷார்ஜா நகரங்களில் போட்டிகளை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் போட்டி அட்டவணை குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கிர்கிஸ்தானில் சிக்கியுள்ள 1,500 இந்திய மாணவர்களை தாயகம் திரும்ப உதவிய சோனு சூட்..!
ஐபிஎல் போட்டி செப்டம்பர் 19ம் தேதி தொடங்கி இறுதிப் போட்டி நவம்பர் 8 ஆம் தேதி வரை மொத்தம் போட்டிகள் 51 நாட்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது உரிமையாளர்களுக்கும் ஒளிபரப்பாளர்களுக்கும் பிற பங்குதாரர்களுக்கும் பொருந்தும் என பெயர் வெளியிட விரும்பாத மூத்த பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.