இன்றைய காலகட்டத்தில் மக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக ஐபோன் மாறிவிட்டது. என்னதான் புது புது ஸ்மார்ட்போன்கள் வந்தாலும் பெரும்பாலோனோர் ஐபோன்களை தான் அதிகம் விரும்புகின்றனர். அதற்கு ஏற்றார் போல் ஆப்பிள் நிறுவனமும் அவ்வப்போது பல அதிரடியான அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ஐபோன் குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது வரும் 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்கு பிறகு தமிழகத்தில் ஐபோன் 17 செல்போன் வடிவமைப்பு தயாரிப்பு பணிகள் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.
Enewz Tamil WhatsApp Channel
அதன்படி ஸ்ரீ பெரும்புதூரில் உள்ள பாக்ஸக்னான், பெகட்ரான், டாடா நிறுவனத்தின் விஸ்ரான் ஆலைகளில் ஐபோன் உற்பத்தி உற்பத்தியை தொடங்க ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதன் பின் 2025 ஆம் ஆண்டு ஐபோன் விற்பனை தொடங்கும் எனவும் தெரிவித்துள்ளனர். தற்போது இந்த செய்தி ஐபோன் பிரியர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அரசு ஊழியர்களே., அகவிலைப்படி உயர்வோடு தீபாவளி போனஸ்? மாத சம்பள இவ்ளோ அதிகரிக்குமா?