தமிழ்நாட்டில் சமீபகாலமாக கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீது குற்றவியல் வழக்கு தொடரப்பட்டு வருகிறது. இந்நிலையில் அறநிலையத்துறைக்கு கோவில் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கை இனியும் மேற்கொள்ள கூடாது என தேசிய பட்டியலின ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்த உத்தரவை எதிர்த்து கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த ஜெயராமன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதை விசாரித்த நீதிபதிகள் “அதிகார வரம்பை மீறி தேசிய பட்டியலின ஆணையம் எப்படி உத்தரவு வழங்கியது என கேள்வி எழுப்பியுள்ளனர்.
“இந்த பட்ஜெட் எங்களுக்கு ஏமாற்றமளிக்கிறது” – நெசவாள சங்க பொருளாளர் வேதனை!!!
மேலும் பட்டியலின ஆணையம் வழங்கிய உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.” எனவும் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளனர். எனவே வழக்கம் போல் ஆக்கிரமிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறநிலையத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவு வழங்கியுள்ளனர்.