Thursday, March 28, 2024

கொரோனாவால் பலியாகும் பாலிசிதாரர்களுக்கு 24 மணி நேரத்தில் இழப்பீடுத் தொகை – எல்ஐசி

Must Read

கொரோனாவால் பலியாகும் பாலிசிதாரர்களுக்கு 24 மணி நேரத்தில் இழப்பீடுத் தொகை வழங்கப்படும் என்று எல்ஐசி நிறுவன மண்டல மேலாளர் கதிரேசன் அறிவித்துள்ளார்.

24 மணி நேரத்தில் இழப்பீட்டுத் தொகை:

ஒரு குடும்பத்தில் வருமானம் ஈட்டும் நபர் இறந்து போனால் அக்குடும்பம் பெரும் துயரத்தை அடைகிறது. இறப்பவர் காப்பீடு எடுத்திருந்தால், அதில் வரும் இழப்பீட்டுத் தொகை அவர் குடும்பத்திற்கு உதவியாக இருக்கும்.

LIC
LIC

நாடு முழுவதும் பரவியுள்ள கொரோனா நோயால், பாலிசிதாரர் எவராவது இறக்க நேரிட்டால், 24 மணி நேரத்தில் இருந்து ஐந்து நாட்களுக்குள், இழப்பீட்டுத் தொகை அவரது குடும்பத்தை அடைய எல்ஐசி வழிவகை செய்துள்ளது.

எல்ஐசி – ன் பணி:

கொரோனாவால் உயிரிழப்பவர்கள் எல்ஐசி நிறுவனத்தின் பாலிசிதாரர்களா என்றும், அவ்வாறெனில் அலுவலக ஊழியர்கள் அல்லது ஏஜெண்டுகள் மூலம் அவரது குடும்பத்தைத் தொடர்புக் கொண்டு இழப்பீடுத் தொகை அவர்களுக்குக் கிடைக்க ஏற்பாடு செய்வதாகவும் மண்டல மேலாளர் கதிரேசன் தெரிவித்துள்ளார்.

 

LIC's new policy
LIC’s new policy

இம்முறைப்படி, ரூ.55 லட்சம் இழப்பீடுத் தொகை இதுவரை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

“அமலாக்கத்துறை என்னை கைது செய்ததற்கான காரணம் இதுதான்”? டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பகீர்!!!

கடந்த 21ஆம் தேதியன்று டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில், அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்தனர். அதன் பின்னர் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -