பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கை படிப்படியாக நிறைவேற்றப்படும்.., அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!!

0
பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கை படிப்படியாக நிறைவேற்றப்படும்.., அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!!
பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கை படிப்படியாக நிறைவேற்றப்படும்.., அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!!

கடந்த 2012ம் ஆண்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு திறனறிவு வகுப்புகளை மேற்கொள்ள பகுதி நேர ஆசிரியர்கள் தொகுப்பூதியத்தில் பணியமர்த்தப்பட்டனர். இவர்கள் கடந்த சில ஆண்டுகளாக பணி நிரந்தரம், ஊதிய உயர்வு போன்ற பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தேர்தல் அறிக்கை 181-ல் பகுதி நேர ஆசிரியர்களுக்கான சலுகையை தெரிவித்திருந்தது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்நிலையில் பகுதி நேர ஆசிரியர்கள் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என அண்மையில் சென்னை டி.பி.ஐ.வளாகத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டனர். இதையடுத்து நிதித்துறை செயலாளரின் கீழ் குழு அமைத்து பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கை தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

பால் விலை இன்று முதல் லிட்டருக்கு ரூ.3 உயர்வு.., பரிதவிக்கும் இல்லத்தரசிகள்!!!

இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுகையில், “முதல்வர் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட குழு பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக நல்ல முடிவுகளையே மேற்கொள்ளும். மேலும் அரசின் நிதி நிலையை கொண்டு கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்” என்றும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here