கொரோனா வைரஸ் காற்றின் மூலம் பரவும் – 239 விஞ்ஞானிகளின் ஆய்வு அறிக்கை எச்சரிக்கை..!

0

கொரோனா வைரஸ் காற்று மூலம் பரவும் என்று 32 நாடுகளைச் சேர்ந்த 239 விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். மேலும் காற்றில் இருக்கும் கண்ணுக்கு அகப்படாத நுண் துகள்களின் மூலமாக பரவி மனிதர்களுக்குப் பாதிப்பை விளைவிக்கக்கூடும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

விஞ்ஞானிகள் ஆய்வு அறிக்கை..!

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தும்மும்போது வெளியாகும் நீர்த் திவலைகள் காற்றில் மிதந்து செல்வதால் கொரோனா பரவும் என்பது விஞ்ஞானிகளின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அதே போல் கொரோனா நோயாளி விடும் மூச்சுக் காற்றில் உள்ள நீர்த்திவலைகளும் காற்றில் மிதந்து நோய் பரவும் என்றும் 239 விஞ்ஞானிகளும் உலக சுகாதார அமைப்புக்கு தங்கள் ஆய்வு முடிவை தெரிவித்துள்ளனர்.

கொரோனாவால் நோயாளி தும்மும்போதும், இருமும்போதும் அதிலிருந்து வெளிவரும் நீர்த்துளிகள் மூலம் கொரோனா நோய் பரவும் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் தொடும் பொருட்களை மற்றொருவர் தொட்டு முகத்தில் தொடும்போதும் கொரோனா பரவும் என உலக சுகாதார அமைப்பு முன்பு அறிவுறுத்தி இருந்தது.

இந்நிலையில் கொரோனா காற்றின் மூலம் பரவக்கூடிய நோயாக அறிவியுங்கள் என நூற்றுக்கணக்கான விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். வெளியில் வரும் போது மட்டுமல்லாமல் வீட்டில் இருக்கும் போதும் முகக்கவசம் அணிய விஞ்ஞானிகள் அறிவுறுத்தி உள்ளனர். மேலும் காற்றின் மூலம் கொரோனா பரவாது என்ற தனது முந்தைய நிலையை உலக சுகாதார நிறுவனம் மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை வழங்கியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here