தற்போது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக டெஸ்ட் தொடர்கள் நடைபெற்று வருகிறது. இதில் 2 வது போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா அணியின் வேக பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் தசை பிடிப்பு காரணமாக பெவிலியன் திரும்பினார். எனவே 3 வது டெஸ்ட் போட்டியில் அவருக்கு பதில் நடராஜன் இடம் பிடிப்பாரா என்று அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.
இந்தியா vs ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவிற்கு சுற்று பயணம் மேற்கொண்ட இந்தியா அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி தனது அபாரமான பந்து வீச்சால் தனது அசத்தலான வெற்றியை பதிவு செய்து அசத்தியது. அதன் பின் இந்தியா அணியில் பல மாற்றங்கள் ஏற்பட்டது. தனது குழந்தை பிறப்பிற்காக கேப்டன் விராட் கோஹ்லி நாடு திரும்பபினர். காயம் காரணமாக தொடரில் இருந்து விலகினார் ஷமி. அவருக்கு பதில் அறிமுக வீரரான சிராஜுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. மேலும் தற்போது இந்தியா அணியை ரஹானே வழிநடத்தி வருகிறார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அதன் பின் தொடங்கிய 2 வது டெஸ்ட் போட்டியில் இந்தியா அணி மிகவும் சிறப்பாக செயல்பட்டது. குறிப்பாக இந்தியா அணியின் பௌலிங் அனைவரையும் பிரமிக்க வைத்தது. முடிவில் இந்தியா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தனது வெற்றியை பதிவு செய்து அசத்தியது. மேலும் இந்த போட்டியின் போது 2 வது இன்னிஸில் தனது 4 ஓவரை வீச வந்த உமேஷ் யாதவ் தசை பிடிப்பு காரணமாக போட்டியின் நடுவே பெவிலியன் திரும்பினார்.
3 வது போட்டியில் இவர் விளையாடுவது சந்தேகமே. தற்போது இவருக்கு பதில் நடராஜனை இந்தியா அணி களமிறக்க வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர். ஒரு நாள் மற்றும் டி 20 போட்டிகளை போலவே டெஸ்ட் போட்டிகளிலும் தனது கால் தடத்தை பதிப்பதை பார்ப்பதற்காக கிரிக்கெட் ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றன. மேலும் இதனை பற்றியா முடிவுகள் பிசிசிஐ நிர்வாகம் விரைவில் தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.