#IndvsAus சிட்னி டெஸ்டில் நடராஜனுக்கு வாய்ப்பு?? வெளியான தகவல்!!

0

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அணியின் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாக அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. காயத்தினால் உமேஷ் யாதவ் விலகிய நிலையில் இவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா vs ஆஸ்திரேலியா:

நடந்து முடிந்த ஐபில் தொடரில் ஹைதராபாத் அணிக்காக சிறப்பாக பந்து வீசி முன்னணி பேஸ்ட்மேகளின் விக்கெட்டை வீழ்த்திய தமிழக வீரர் நடராஜன் அனைவராலும் கவரப்பட்டார். மேலும் ஆஸ்திரேலியா சுற்று பயணத்துக்காக அணியில் இடம் பிடித்த வருண் சக்ரவர்த்தி காயத்தின் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டார். மேலும் அதிர்ஷ்டவசமாக அந்த வாய்ப்பு நடராஜனை தேடி வந்தது. இந்த வாய்ப்பை தமிழனான வீரர் நடராஜன் மிக அருமையாக பயன்படுத்தி கொண்டார். இந்தியா அணியினருடன் ஆஸ்திரேலியா சென்ற அவர் சர்வதேச போட்டிகளில் தனது பயணத்தை ஆரம்பித்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஒருநாள் போட்டிகளில் அறிமுகமான இவர் தனது பௌலிங்கால் ஆஸ்திரேலியா அணியினரை திணற அடித்தார். மேலும் இவர் டி 20 தொடரில் இடம் பெற்றார். இவர் விளையாடிய 3 டி20 போட்டிகளில் 6 விக்கெட்டை வீழ்த்தி அசத்தியுள்ளார். மேலும் இந்தியா அணியின் பயிற்சியாளர்களின் அறிவுரையால் டெஸ்ட் தொடருக்காக அவர் ஆஸ்திரேலியாவில் தங்கினார். ஆனால் அவருக்கு டெஸ்ட் தொடரில் விளையாட வாய்ப்பு அளிக்கவில்லை.

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு – இன்று முதல் பக்தர்கள் அனுமதி!!

மேலும் வலை பயிற்சியின் போது இந்தியா அணி பேட்ஸ்மேகளுக்கு தனது பௌலிங்கால் பயிற்சி அளித்து வந்தார். வலை பயிற்சியின் போது இந்தியா அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களான விராட்கோஹ்லி, ரஹானே, புஜாரா போன்றோரின் விக்கெட்டை எடுத்து அசத்தினார். மேலும் முதல் டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக ஷமி தொடரில் இருந்து விலகினார். ஷமிக்கு பதில் நடராஜன் 2வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவர் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அறிமுக வீரராக சிராஜை இந்தியா அணி களமிறங்கியது.

நடராஜனுக்கு வாய்ப்பு:

தற்போது இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது உமேஷ் யாதவ் காயம் காரணமாக பெவிலியன் திரும்பினார். எனவே தற்போது உமேஷ் யதேவ்க்கு பதில் நடராஜன் சிட்னியில் நடக்கும் போட்டியில் விளையாடுவர் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் 3வது போட்டியில் இந்தியா அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ரோஹித் சர்மா அணியில் இணையப்போகிறார்.

இது இந்தியா அணியை சற்று வலுவாகியுள்ளது. இவர் மயங் அகர்வாலுக்கு பதில் களமிறங்குவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2 போட்டிகளில் சொதப்பிய விஹாரி இந்த போட்டியில் விளையாடுவது கேள்விக்குறியே?? விரைவில் 3 வது போட்டிக்கான வீரர்களின் பெயர் பட்டியல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here