இண்டிகோ விமான நிறுவனம், தடுப்பூசி செலுத்திக்கொண்ட பயணிகளுக்காக ஒரு அட்டசமான சலுகையை அறிவித்துள்ளது. அது என்னவென்று இங்கே பார்க்கலாம்.
கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்த இருந்த ஆரம்ப காலத்தில், தடுப்பூசி குறித்த தவறான தகவல்களால் மக்கள் தடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்டவில்லை. பின்னர் மத்திய, மாநில அரசு எடுத்த தீவிர முயற்சிகளாலும் இரண்டாம் அலையின் தாக்கத்தினாலும் மக்கள் தாமாகவே முன்வந்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.
தற்போது இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மற்ற நாடுகளுக்கு முன் உதாரணமாக துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இண்டிகோ விமான நிறுவனம் தடுப்பூசி செலுத்திக்கொள்வதை மேலும் ஊக்குவிக்கும் வகையில் ஒரு சிறப்பு சலுகையை தடுப்பூசி செலுத்திக்கொண்ட பயணிகளுக்காக அறிவித்துள்ளது.
அந்நிறுவனம் அளித்துள்ள அறிக்கையில், தடுப்பூசி முதல் டோஸ் அல்லது இரண்டு டோஸ் போட்ட பயணிகளின் விமான பயண கட்டண முன்பதிவின் போது விமான கட்டணத்தில் 10% சலுகை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இந்தியாவின் தடுப்பூசி திட்டத்திற்கு வலுசேர்க்கும் விதமாக அந்நிறுவனம் இந்த சலுகையை வழங்கியுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்