நாடு முழுவதும் டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்து வருவதால் ஆன்லைன் முதல் உள்ளூர் வணிக வளாகங்கள் வரை பேமெண்ட் அனைத்தும் UPI, கிரெடிட் கார்டு மூலம் செலுத்தப்பட்டு வருகிறது. அதிலும் கிரெடிட் கார்டு பேமெண்ட்க்கு தள்ளுபடி சலுகைகள் அதிக அளவில் இருப்பதால் வங்கிகளில் கிரெடிட் கார்டு விநியோகம் அதிகரித்து வருகிறது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இதுவரை இந்திய பிரஜைகள் வெளிநாடுகளில் தங்களது கிரெடிட் கார்டை பயன்படுத்தினால் 5 சதவீதம் வரியை மத்திய அரசு வசூல் செய்து வந்தது. தற்போது அதற்கான வரி 20 சதவீதம் அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளனர். இதன் காரணமாக கோடை விடுமுறையை கொண்டாட வெளிநாடு செல்பவர்கள் வரி விதியினை அறிந்து கிரெடிட் கார்டுகளை பயன்படுத்த வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.