ஷாங்காயில் நடைபெற்று வரும் உலக கோப்பை வில்வித்தை போட்டியில் இந்திய ஜோடி காம்பவுண்ட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
இந்திய ஜோடி
சீன தலைநகர் ஷாங்காயில் உலக கோப்பை வில்வித்தை போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்தியா, சீனா, துருக்கி, வங்கதேசம் உள்ளிட்ட அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். இதில் இந்திய ஜோடியான ஜோதி சுரேகா வென்னம் மற்றும் ஓஜஸ் பிரவின் டியோ டலே ஜோடி 2 ஆம் சுற்றில் 158-151 என்ற கணக்கில் வங்கதேசத்தை வீழ்த்தியது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இதை தொடர்ந்து நடைபெற்ற காலிறுதி சுற்றில் 157-151 என்ற கணக்கில் துருக்கி அணியை வீழ்த்தி காம்பவுண்ட் சுற்றுக்கு முன்னேறியது. இந்த சுற்றில் இந்திய ஜோடி பலம் வாய்ந்த இத்தாலி அணியை எதிர்கொண்டது. இரு அணி வீரர்களுக்கு இடையில் நடந்த கடுமையான ஆட்டம் சமநிலையில் முடிந்தது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்., ஜனவரி 1ம் தேதி முதல் அகவிலைப்படி?? வெளியான தகவல்!!!
இதனால் ஷூட் அவுட் முறை பின்பற்றப்பட்டது. இதில் இந்திய அணி தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறியது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி பதக்கம் வெல்வது உறுதியாகிவிட்டது.