இந்திய ஈட்டி எறிதல் வீரர் ஊக்க மருந்துக்கான சர்ச்சையில் சிக்கி போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஷிவ்பால் சிங்
இந்தியாவுக்காக பல தடகள போட்டியில் விளையாடிய ஷிவ்பால் சிங் தற்போது 4 ஆண்டுகள் போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவர் கடந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்டார். இந்த போட்டியில் இவர் ஊக்கமருந்து பயன்படுத்தியதாக சிலர் குற்றம் சாட்டினர்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இதையடுத்து ஷிவ்பால் சிங்கை பரிசோதனை செய்ததில், “மெத்தாண்டியானோன்”என்ற தடை செய்யப்பட்ட போதை மருந்தை பயன்படுத்தி உள்ளார். இதனால் இவருக்கு இந்திய தடகள சங்கம் அக்டோபர் 2025 ஆம் ஆண்டு வரை தடகள போட்டியில் பங்கேற்க தடை விதித்துள்ளனர்.
எதிரணி வீரரை பங்கம் பண்ணிய இந்திய வீரர்.., மைதானத்தில் நடந்த தரமான சம்பவம்.., வைரலாகும் வீடியோ!!
மேலும் இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு ஹங்கேரியில் நடந்த புடாபெஸ்ட் ஓபன் தடகளப் போட்டியில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை தனதாக்கி கொண்டவர். இந்த ஷிவ்பால் சிங் ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய 5வது இந்திய வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.