நம் இந்திய அரசாங்கம் ஒவ்வொரு குடியரசு தினத்தை முன்னிட்டு 1954 ஆம் ஆண்டிலிருந்து பல துறையை சேர்ந்த மூத்த வல்லுனர்களை தேர்வு செய்து பாரத ரத்னா, பத்ம பூஷன் விருது, பத்மஸ்ரீ போன்ற பல விருதுகளை கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் இன்று மத்திய அரசு நாட்டில் உள்ள சிறந்த திறமைகளை கொண்ட இந்திய குடிமக்களை பாராட்டி அங்கீகாரம் கொடுக்கும் வகையில் பல விருதுகளை வழங்கியுள்ளது.
இடைத்தரகர் இனி இல்லை.., ஒரே நாளில் பாஸ்போர்ட் தர நான் ரெடி.., உயர் அதிகாரி அதிரடி அறிவிப்பு!!!
மேலும் கலை, இலக்கியம், இசை, விளையாட்டு, அறிவியல், சமூகப் பணி, வர்த்தகம் போன்ற துறைகளை தேர்வு செய்து அவர்களின் சேவை மற்றும் அறிவை பாராட்டும் விதமாக சிவிலியன் விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டை சேர்ந்த வாணி ஜெயராம் அவர்கள் பத்மபூஷன் விருதை பெற்றுள்ளார். மேலும் இவர் பல மொழிகளில் 10000 க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இவரை தவிர தெலுங்கு சினிமாவை சேர்ந்த இசை ஜாம்பவான் கீரவாணி அவர்களுக்கு இந்தியாவின் உயரிய சிவிலியன் விருதில் நான்காவதாக கருதப்படும் ”பத்ம ஸ்ரீ விருது” வழங்கப்பட்டுள்ளது. மேலும் இவரின் இசையில் வெளியான RRR படத்தின் ‘நாட்டு கூத்து” சிறந்த பாடலுக்காக ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.