இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணி வருகின்ற ஜூன் மாதம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கான இறுதி போட்டியை விளையாடவுள்ளது. அதற்கான இந்திய அணி வீரர்களின் பெயர் பட்டியலை நேற்று பிசிசிஐ அறிவித்தது.
கொரோனா நோய்த்தொற்று:
கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் கொரோனா நோய்த்தொற்று விளையாட்டு துறையை மிக கடுமையாக பாதித்து வருகிறது. அதன்படி சில தினங்களுக்கு முன்பு ஐபிஎல் தொடர் கொரோனா நோய்த்தொற்று காரணமாக தேதி அறிவிக்காமல் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் ஐபிஎல் ரசிகர்கள் பெரிதும் ஏமாற்றமடைந்தனர். தற்போது ஐபிஎல் தொடருக்காக இந்தியா வந்த வெளிநாட்டு வீரர்கள் அனைவரும் தங்களது சொந்த நாட்டுக்கு செல்கின்றனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி வீரர் வருண் சக்கிரவர்த்தி போன்ற வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது அனைவருக்கும் நினைவிருக்கும். தற்போது அந்த வகையில் மற்றொரு கொல்கத்தா அணி வீரரான பிரஷித் கிருஷ்ணாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கங்கனா ரனாவத்துக்கு கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் அனுமதி!!
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
காரணம் இந்திய அணி வருகிற ஜூன் மாதம் 18ம் தேதி அன்று நியூஸிலாந்து அணிக்கு எதிராக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் விளையாடவுள்ளது. தற்போது அதற்கான இந்திய அணியை பிசிசிஐ நேற்று அறிவித்தது. அந்த அணியின் ரிசர்வ் வீரராக பிரஷித் கிருஷ்ணா தேர்வாகியிருந்தார். தற்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.