இந்திய அணியின் கேப்டனாக திகழும் விராட் கோஹ்லியின் பல முகங்களை பார்த்த ரசிகர்கள் மழலை முகம் மாறாத அவரது குழந்தை பருவ புகைப்படம் ஒன்றை ஷேர் செய்து வருகின்றனர்.
விராட் கோஹ்லி:
இந்திய அணியின் கேப்டனாக திகழ்பவர் தான் விராட் கோஹ்லி. இவரது அதிரடியான ஆட்டத்தை பார்த்து ரசிகர்கள் இவருக்கு வைத்த பெயர் தான் கிங் கோஹ்லி. பெயருக்கு ஏற்பது போல் இவர் இந்திய அணி கடினமான சூழலில் இருக்கும் பொழுது களமிறங்கி தனது அதிரடியை வெளிப்படுத்தி இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்துவிடுவார். இவர் தற்போது வரை பல சாதனைகளை படைத்து பலருக்கும் முன்னுதாரணமாக இருந்து வருகிறார்.
சர்வதேச போட்டிகளை போல் ஐபிஎல் தொடரிலும் பல சாதனைகளை படைத்துள்ளார் கோஹ்லி. ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டனாக விராட் கோஹ்லி திகழ்கிறார். ஆனால் இந்த அணி இதுவரை ஒரு முறை கூட ஐபிஎல் கோப்பையை கைப்பற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
ஆனால் ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்களை குவித்த வீரர் யார் என்றால் அது விராட் கோஹ்லி. மேலும் சர்வதேச சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளும் பொழுது அதிக டெஸ்ட் தொடர்களை கைப்பற்றிய கேப்டன் என்ற பெருமையையும் விராட் கோஹ்லி பெற்றுள்ளார். விளையாட்டில் கோவமாக அக்ரசிவாக இருக்கும் விராட் கோஹ்லியை பார்த்த ரசிகர்கள் தற்போது சிரித்து விளையாடும் குழந்தையாய் பார்ப்பதால் அதனை ரசிகர்கள் ஷேர் செய்து ட்ரெண்ட் ஆக்கி வருகிறார்கள்.