இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என்ற சமநிலையில் உள்ளது. இந்நிலையில் இரு அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி நாளை (ஜனவரி 18) ஞாயிற்றுக்கிழமை பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.
சம பலம் கொண்ட அணிகள்
முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் படுதோல்வி அடைந்தது. இதனால் இரண்டாவது போட்டியில் வெற்றி முனைப்புடன் விளையாடிய இந்தியா அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிறப்பான முறையில் விளையாடிய கேஎல் ராகுல் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
பெங்களூரு ஸ்டேடியத்தில் இரட்டை சதம் அடித்த ரோஹித் சர்மா கடைசி போட்டியில் காயம் காரணமாக விளையாடுவது சந்தேகமே. இந்திய அணியைப் பொறுத்த வரை பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் சம பலத்தில் மீண்டெழுந்துள்ளது.
இதனால் இந்த கடைசி வெற்றியை தீர்மானிக்கும் போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.