இந்தியாவிற்கு எதிராக ஆறுதல் வெற்றி பெறுமா ஆஸ்திரேலியா?? இன்று 3வது டி20 போட்டி!!

0

ஆஸ்திரேலியா சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது இந்திய அணி கிரிக்கெட் அணி. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது கட்ட டி 20 போட்டி இன்று மதியம் நடக்க உள்ளது. இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியை ஒயிட் வாஷ் செய்வதில் இந்திய அணி முனைப்பு காட்டி வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

முதலில் நடைபெற்ற ஒரு நாள் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற டி 20 போட்டிகளிலும் ஆஸி அணி வெற்றி என்ற உறுதியில் இருந்தது. ஆனால் முதலில் நடைபெற்ற டி 20 போட்டியில் இந்திய அணி 11 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது ஆஸி அணியை அதிர்ச்சி அடைய செய்தது.

இரண்டாவது டி 20 போட்டியிலும் 195 ரன்களை இலக்காக கொண்ட இந்திய அணி 2 பந்துகள் மீதம் உள்ள நிலையில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்திய ஆஸி அணியை 3-0 என்ற கணக்கில் முழு வெற்றி அடைய வேண்டும் என்ற தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

சிட்னியில் இன்று கடைசி போட்டியான மூன்றாவது டி 20 நடக்க உள்ள நிலையில் ஆஸி அணி ஆறுதல் வெற்றியாவது பெற மாட்டோமா என்ற தவிப்பில் உள்ளது. இப்போட்டியில் ஆஸி அணி பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் முழு திறனை வெளிப்படுத்தினால் மட்டுமே ஆறுதல் வெற்றியாவது பெற முடியும். இந்திய அணி தொடரை வென்று உள்ளதால் இப்போட்டியில் புதிய வீரர்களை களம் இறக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸி அணியை அதன் சொந்த மண்ணில் ஒயிட் வாஷ் செய்வதில் தான் இந்திய அணி முழு வேகம் காட்டி வருகிறது. இப்போட்டி இன்று மதியம் 1:40 மணிக்கு சிட்னி மைதானத்தில் நடைபெற உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here