50 வது தலைமை நீதிபதியானார் டி.ஒய்.சந்திரசூட் – குடியரசு தலைவர் இன்று பதவி பிரமாணம் செய்து வைப்பு!!

0
50 வது தலைமை நீதிபதியானார் டி.ஒய்.சந்திரசூட் - குடியரசு தலைவர் இன்று பதவி பிரமாணம் செய்து வைப்பு!!
50 வது தலைமை நீதிபதியானார் டி.ஒய்.சந்திரசூட் - குடியரசு தலைவர் இன்று பதவி பிரமாணம் செய்து வைப்பு!!

இந்தியாவின் 50 வது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் இன்று, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவால் பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டுள்ளார்.

இன்று பதவி பிரமாணம் :

இந்திய நீதிமன்றங்களின் தலைமையாக, டெல்லி உச்ச நீதிமன்றம் திகழ்ந்து வருகிறது. இந்த நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த உதய் உமேஷ் லலித் அவர்களின் பதவிக்காலம் அண்மையில் நிறைவடைந்தது. உயர் சாதி ஏழைகளுக்கான, 10% இட ஒதுக்கீடு செல்லும் என அவர் தலைமையிலான நீதிபதிகள் அமர்வு சமீபத்தில் தீர்ப்பளித்தது என்பது குறிப்பிடத் தக்கது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதனைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் இன்று நாட்டின் 50 வது தலைமை நீதிபதியாக பதவி ஏற்று கொண்டார். இவருக்கு இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

TNPSC குரூப் 2/2A முதன்மை தேர்வுக்கு 5.8% பேர் தேர்வு.,, முழு விவரம் இதோ!!

இவர் இந்தியாவில் நீண்ட காலம் தலைமை நீதிபதியாக பதவி வகித்த யஷ்வந்த் விஷ்ணு என்பவரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 2024 ஆம் ஆண்டு நவம்பர் 9ம் தேதி வரை தலைமை நீதிபதியாக பதவி வகிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here