இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,29,942 பேர் பாதிப்பு !!!

0

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,29,942 பேர் பாதிப்பு !!!

மத்திய சுகாதார அமைச்சின் படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,29,942 புதிய # COVID19 வழக்குகள் பதிவாகியுள்ளது.

இந்தியாவில் தற்போது உள்ள நிலையில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருப்பதால் பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 3,29,942 நபர்கள் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளனர் மற்றும்   3,56,082 நபர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர் மற்றும் 3,876 இறப்பு பதிவாகி இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்தியாவில் இதுவரை மொத்தமாக 2,29,92,517 வழக்குகள் பதிவாகி உள்ளது. இதனை தொடர்ந்து 1,90,27,304 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இறப்பு எண்ணிக்கை இதுவரை 2,49,992 ஆக பதிவாகி உள்ளது. தற்போது சிகிச்சையில் 37,15,221 பேர் உள்ளனர். இதுவரையில் மொத்தமாக 17,27,10,066 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here