அஞ்சல் துறை 2023 : தமிழக மாணவர்கள் விண்ணப்பிப்பதில் சிக்கல்! சு வெங்கடேசன் MP காட்டம்!!

0
அஞ்சல் துறை 2023 : தமிழக மாணவர்கள் விண்ணப்பிப்பதில் சிக்கல்! சு வெங்கடேசன் MP காட்டம்!!
அஞ்சல் துறை 2023 : தமிழக மாணவர்கள் விண்ணப்பிப்பதில் சிக்கல்! சு வெங்கடேசன் MP காட்டம்!!

இந்திய அஞ்சல் துறையின் கிராமின் டாக் சேவாக் பணிக்கான காலி பணியிடங்கள் குறித்து அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டிருந்த நிலையில், இதற்கு தமிழக மாணவர்கள் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

விண்ணப்பத்தில் சிக்கல்:

இந்திய அஞ்சல் துறையில் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், நாடு முழுவதும் உள்ள தபால் கிளைகளில் பிரான்ச் போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி பிரான்ச் போஸ்ட் மாஸ்டர் ஆகிய பணியிடங்களுக்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது. இதில் தமிழகத்தில் மட்டும் 3,167 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில், நேரடி கலந்தாய்வு மூலம் விண்ணப்பதாரர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதற்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 16ஆம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த பணிக்கு, தமிழக மாணவர்கள் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதாவது, இதற்கான விண்ணப்ப படிவத்தில் மும்மொழி திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் மட்டுமே, விண்ணப்பிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக மக்களே உஷார்.,கட்டணம் செலுத்தவில்லையெனில் இன்று இரவே Power cut ஆ? மின்வாரியம் விளக்கம்!!

இதனை சுட்டிக்காட்டிய சு வெங்கடேசன் எம்பி, இந்த தேர்வு படிவத்தை உடனே மாற்ற வேண்டும் என அஞ்சல் துறை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். அஞ்சல் துறையின் இந்த நடவடிக்கை தமிழக மாணவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here