அஞ்சல் துறையின் கீழ் இயங்கும், இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி 2 நிர்வாகங்களுடன் இணைந்து வழங்கும் விபத்து காப்பீடு பாலிசி குறித்த விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளது.
முக்கிய விவரங்கள்:
பெரும்பாலான வாடிக்கையாளர்கள் வங்கி மற்றும் அஞ்சல் சேவையை, தங்கள் சேமிப்புக்கு பயன்படுத்துகின்றனர். அந்த வகையில் இந்திய அஞ்சல் துறை மூலம் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி, 2 நிறுவனங்களுடன் இணைந்து விபத்து காப்பீடு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
ஆண்டுக்கு ரூபாய் 399 மற்றும் 396 பிரிமியங்களில் செலுத்தி, ரூபாய் 10 லட்சம் வரை விபத்து காப்பீடு பெறலாம். இதற்கு 18 முதல் 65 வயது வரை விண்ணப்பிக்கலாம். இதற்காக பயனர்கள் எந்தவித சான்றிதழ்களும் சமர்ப்பிக்க தேவையில்லை. தபால்காரரிடம் வெறும் ரேகை மட்டும் வைத்து இதற்கு விண்ணப்பிக்கலாம்.
போக்குவரத்து விதியை மீறிய பிரதமர்.., வெகுண்டெழுந்த சர்ச்சையால் அபராதம் விதித்த போலீசார்!!!
இதில், வாடிக்கையாளர்கள் எதிர்பாராத விபத்தில் சிக்கினால் அவர்களுக்கு மருத்துவ செலவாக ரூ. 60,000, உயிரிழந்தவர் குழந்தைக்கு கல்வி செலவுக்காக ரூ. 1 லட்சமும் வழங்கப்படும். இதில் இணைய விரும்பும் வாடிக்கையாளர்கள் உடனடியாக தங்கள் ஏரியாவில் உள்ள அஞ்சல் அலுவலகம் அல்லது தபால்காரரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.