பாகிஸ்தானுடன் நேரடியாக சர்வதேச போட்டிகளில் விளையாட முடியாது என இந்திய கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது.
இந்தியா VS பாகிஸ்தான்
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் என்றாலே ரசிகர்களுக்கு குஷியாக தான் இருக்கும். ஆனால் இந்த இரு அணிகளுக்கும் கடந்த 2007ம் ஆண்டிற்கு பிறகு நேரடியாக எந்த போட்டிகளிலும் விளையாடவில்லை. இதற்கு காரணம் இரு நாடுகளுக்கு இடையே நிலவும் அரசியல் பிரச்சனைகள் தான்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இதனால் இரு நாடுகளும் எல்லை தாண்டி வந்து எந்த போட்டியிலும் பங்கேற்க பயப்படுகின்றனர். இந்த சிக்கலை முடிவுக்கு கொண்டுவருவதற்காக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இரு நாடுகளை அழைத்து டெஸ்ட் தொடர்களை நடத்த பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்.
இது குறித்து எந்த முடிவையும் பாகிஸ்தான் தற்போது வரை வெளியிட வில்லை. ஆனால் இந்திய கிரிக்கெட் கவுன்சில், இனிமேல் பாகிஸ்தானுடன் நேரடி போட்டிகளில் விளையாட முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். மேலும் ICC தரப்பில் நடத்தப்படும் போட்டிகளில் மட்டுமே இந்தியா, பாகிஸ்தானுடன் விளையாடும் எனவும் கூறியுள்ளனர்.