இந்தியாவில் ஒரே நாளில் 1.79 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு – சுகாதார துறையின் அறிவிப்பால் பீதியில் மக்கள்!!

0

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 1,79,723 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

அதிர்ச்சி தகவல்:

இந்தியாவில், கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு மிகவும் அதிகரித்து காணப்படுகிறது. இதனால், 3ம் அலை தொடங்கி விட்டதாக உலக சுகாதார நிறுவன அதிகாரிகள் அண்மையில் எச்சரிக்கை விடுத்தனர். இந்த நிலையில், நாடு முழுவதும் 2 டோஸ் தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி இன்று தொடங்கப்படுகிறது. இதையடுத்து, நாடு முழுவதும் நேற்று கொரோனாவால் 1,59,632 பேர் பாதிக்கப்பட்டனர்.

இது போக, இன்று புதிதாக 1,79,723 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இது நேற்றைய பாதிப்பை விட 12.6% அதிகம் என்பதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இதே போல், தொற்று பாதிப்பால் 146 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 46,569 பேர் தொற்றில் இருந்து மீண்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here