இந்தியாவில் சமூகப் பரவலாக மாறிய ஓமைக்ரான் – சுகாதாரத் துறையின் அறிவிப்பால் நிலைகுலைந்த மக்கள்!!

0

இந்தியாவில், கொரோனாவின் உருமாறிய ஓமைக்ரான் வைரஸ் சமூகப் பரவலாக மாறியுள்ளதாக, மத்திய சுகாதாரத் துறையின் கீழ் இயங்கும் INSACOG அமைப்பு அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளது.

 சமூகப் பரவல் :

இந்தியாவில் கடந்த சில தினங்களாக, கொரோனா வின் உருமாறிய ஓமைக்ரான் வைரஸ் பரவல் மிகவும் தீவிரமாக உள்ளது. இதனால் பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல் படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், கொரோனா பரவல் சற்று குறைந்து வரும் நிலையில், ஓமைக்ரான் பரவல் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. இதுகுறித்து, மத்திய சுகாதாரத் துறையின் கீழ் இயங்கி வரும் INSACOG அமைப்பு பகிரங்க எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

அதன்படி, நாட்டின் பெரும்பாலான நகரங்களில் ஓமைக்ரான் பாதிப்பு அதிகரித்து உள்ளதால், இந்த வைரஸ் தொற்று சமூகப் பரவலாக மாறிவிட்டதாக கவலை தெரிவித்துள்ளனர். ஊரடங்கிலிருந்து, கொஞ்சம் மீண்டு வரும் மக்களுக்கு, இந்த செய்தி பேரிடியாக அமைந்துள்ளது. இதனால் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here