தடுப்பூசி போடாதவர்கள் ஜனவரி 1 முதல் வெளியே நடமாட தடை – மாநில அரசின் அதிரடி அறிவிப்பு!!

0

இந்தியாவில் நாளுக்கு நாள் ஓமைக்ரான் தொற்று அதிகரித்து வருவதால், தடுப்பூசி போடாதவர்கள் வெளியே நடமாட தடை உள்ளிட்ட பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

கூடுதல் கட்டுப்பாடுகள் :

இந்தியாவில் ஓமைக்ரான் வைரஸ் பரவல் தீவிரமெடுத்துள்ளதை அடுத்து மாநிலங்கள் தங்கள் தேவைகளுக்கு ஏற்ப கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து கொள்ளலாம் என மத்திய அரசு அனுமதி வழங்கியது. இந்தியாவில் இதுவரை, 415க்கும் மேற்பட்ட நபர்கள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதை  அடுத்து, நேற்று உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமலானது. இந்த நிலையில், தற்போது மேலும் குஜராத், மகாராஷ்டிரா, ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் இரவில் மக்கள் நடமாடவும், பொது இடத்தில் 5 நபர்களுக்கு மேல் கூடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஒடிசா மற்றும் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் பண்டிகை கொண்டாட்டங்களில் 50 நபர்களுக்கு மேல் ஒன்றாக கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் மேலும் 20 பேர் ஓமைக்ரான் வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளதால், மாநிலத்தின் பாதிப்பு எண்ணிக்கை 108 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் ஹரியானா மாநிலத்தில் ஜனவரி 1 முதல் தடுப்பூசி செலுத்தாதவர்கள் வெளியே நடமாட தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here