இந்தியாவின் உத்தரவாத பென்ஷன் திட்டம் குறித்த அறிவிப்பு மற்றும் செயல்முறைகளை PFRDA தலைவர் சுப்ரதீம் பந்தோபத்யாய் அறிவித்துள்ளார்.
முக்கிய அறிவிப்பு:
இந்தியாவின், தேசிய பென்ஷன் திட்டத்தை, பென்சன் ஒழுங்குமுறை ஆணையமான PFRDA நிர்வகித்து வருகிறது. இவை குறைந்தபட்ச வருமானத்துடன் உத்தரவாதம் அளிக்கும் புதிய பென்ஷன் திட்டத்தை விரைவில் துவங்க உள்ளதாக இதன் தலைவர் சுப்ரதீம் பந்தோபத்யாய் அண்மையில் அறிவித்தார். இதுகுறித்து பேசிய, அவர் உத்திரவாத பென்ஷன் திட்டம் ஒரு புதிய முன்னோட்டம் என்பதால், இது குறித்து ஆராய நிபுணர் குழுவுடன் பேச்சுவார்த்தை நடந்துள்ளதாக குறிப்பிட்டார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்த மாதத்தில் இறுதியில் இந்த திட்டம் வடிவம் பெற்று விரைவில் அமல்படுத்தப்படும் என தெரிவித்தார். கடந்த 13 ஆண்டுகளாக இந்த பென்ஷன் திட்டங்களுக்கு சராசரியாக 10% வருமானம் கிடைத்துள்ளதால், இந்த திட்டத்தின் வாயிலாக புதிய அளவில் வருமானம் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் எந்த விகிதத்தில் வருமானம் கிடைக்கும் என்பது இன்னமும் நிர்ணயம் செய்யப்படவில்லை. இந்த திட்டம் குறித்த அப்டேட்டுகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.