இந்தியாவில் மீண்டும் அமலாகிறதா கூடுதல் கட்டுப்பாடுகள்?? மாநில முதல்வர்களுடன் பிரதமர் இன்று ஆலோசனை!!

0

இந்தியாவில் கொரோனா தொற்று மிகவும் அதிகரித்து வருவதால், அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனை நடத்த உள்ளார்.

பிரதமர் ஆலோசனை:

இந்தியா முழுவதும் டெல்டா வைரஸ் மற்றும் உருமாறிய ஓமைக்ரான் வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர பொதுமுடக்கம், வார இறுதி நாள் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது. மேலும், மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை மாநில அரசு முழு மூச்சாக செய்து வருகிறது. இந்த நிலையில், உயர் மட்ட மருத்துவ அதிகாரிகளுடன் பிரதமர் மோடி அண்மையில் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

இந்த கூட்டத்தில், சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்துதல் மற்றும் வயதானவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்துதல் உள்ளிட்ட  பணியை தீவிரப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த நிலையில், வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக அனைத்து மாநில முதல்வர்களுடன் மோடி இன்று ஆலோசனை நடத்த உள்ளார். இந்தியா முழுவதும் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், பிரதமரின் இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here