கொரோனா நோயினால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோய்க்கான மருந்து இன்னும் எந்த நாடும் கண்டுபிடிக்கவில்லை, முதல் கட்டமாக இந்த நோயை எதிர்த்து போராடவும் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தடுப்பூசிகள் மட்டுமே மக்களுக்கு செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவசரகால பயன்பாட்டிற்காக்க அமெரிக்காவின் மாடர்னா தடுப்பூசியை செலுத்த மத்திய மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை அனுமதி அளித்துள்ளது.
இந்தியாவிற்கு மாடர்னா தடுப்பூசி இறக்குமதி
கொரோனா என்னும் கொடிய நோய்க்கான மருந்தை கண்டுபிடிப்பதில் உலக நாட்டில் உள்ள அணைத்து மருத்துவ குழுவும் போராடி கொண்டுள்ளது. இதற்கிடையில் மக்களை நோயில் இருந்து காப்பாத்த எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் நோயிலிருந்து தப்பிக்கவும் எதிர்த்து போராட தடுப்பூசிகளை பயன்படுத்த வருகிறார்கள். இந்நிலையில் இந்தியாவில் அமெரிக்காவின் மாடர்னா தடுப்பூசியை இந்தியாவில் இறக்குமதி செய்து இந்தியாவில் பயன்படுத்த சிப்லா நிறுவனம் மத்திய மருந்துக் கட்டுப்பாட்டுத் துறையிடம் அனுமதி கேட்டிருந்தது. ஆனால் இப்பொழுது இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவாக்சின், கோவிஷீல்ட் மட்டுமே மக்களுக்கு செலுத்தி வருகின்றது இந்திய அரசு அதுமட்டுமில்லாமல் ரஷ்யா நாட்டின் தடுப்பூசியான ஸ்புட்னிக் v குறிப்பிட்ட சில பேருக்கு அளித்து வருகிறது, இருந்தாலும் இதனை விட அதிக சக்தி கொண்ட மருந்துகளை இருகமதி செய்து மக்களுக்கு அளிக்க வேண்டும் என்று எண்ணி அமெரிக்கா நிறுவனத்தின் மாடர்னா தடுப்பூசியை இந்தியாய்விற்குள் கொண்டு வர அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில் மும்பையில் உள்ள சிப்லா நிறுவனம் மூலம் அமெரிக்காவில் இருந்து மாடர்னா தடுப்பூசிகளை இறக்குமதி செய்து அவசர கால பயன்பாட்டிற்கு மட்டும் அளிக்கவேண்டும் என்று மத்திய மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை அனுமதி வழங்கியுள்ளது. இந்த மருந்தை முதலில் 100 பேருக்கு செலுத்தி அதன் செயல்திறன்கள் மற்றும் பக்க விளைவுகள் எதுவும் உண்ட என்று அறிந்த பின்னரே பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென்றும் கூறியுள்ளது. 90 சதவீதம் மாடர்னா தடுப்பூசி செயல்திறன் உடையது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்