இந்தியாவில் வேகமெடுக்கும் XE வகை கொரோனா – மீண்டும் அமலாகும் முழு முடக்கம்? பொதுமக்கள் அதிர்ச்சி!!

0
தீக்கிரையாகிய பள்ளி வளாகம்.. வன்முறையில் இறங்கிய மக்கள் - 144 தடை உத்தரவு அமல்!
தீக்கிரையாகிய பள்ளி வளாகம்.. வன்முறையில் இறங்கிய மக்கள் - 144 தடை உத்தரவு அமல்!

இந்தியாவில் ஓமைக்ரான் வைரஸின் பிஏ1 (BA.1) மற்றும் பிஏ2 (BA.2) என்ற இரண்டு வைரஸின் கலப்பினமான XE என்ற வகை கொரோனா பாதிப்பு அண்மையில் குஜராத்தில் ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதிய வகை வைரஸ்:

இந்தியாவில், கடந்த சில தினங்களாக கொரோனா பரவல் மிகவும் குறைந்து வருகிறது. இதனால் கடந்த மாதம் முதல், அனைத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளை வாபஸ் பெறுவதாக மத்திய அரசு அறிவித்தது. இந்த நிலையில், ஓமைக்ரான் வைரஸின் மாறுபாடு அடைந்த பிஏ1 மற்றும் பிஏ2 என்ற இரண்டு வைரஸ்களின் கலப்பினமான XE என்ற வகை கொரோனா பாதிப்பு ஐரோப்பிய நாடான பிரிட்டனில் பரவி  மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வந்தது. .

இந்த நிலையில், இந்த XE என்ற வகை வைரஸ் பாதிப்பு குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 65 வயது முதியவருக்கு  கடந்த மார்ச் 12ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது. இந்தியாவிலேயே இந்த வைரஸ் பாதிப்பு முதன் முறையாக குஜராத் மாநிலத்தில் கண்டறியப்பட்டுள்ளதால் அங்குள்ள மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இந்தப் புதுவகை வைரஸ் சளி, தும்மல், தொண்டை வலி போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துவதாகவும், அதன்  வீரியம் குறித்து இன்னும் தெளிவாக ஆராயப்படவில்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த வைரஸ் பாதிப்பால், இந்தியாவில் மீண்டும் முழு பொது முடக்கம் அமலாகுமோ?  என்ற அச்சத்தில் பொதுமக்கள் உறைந்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here