நாட்டில் இனி சிலிண்டருக்கு மானிய விலை இல்லை?? பயனாளிகளுக்கு ஷாக் கொடுத்த மத்திய அரசு!!

0
நாட்டில் இனி சிலிண்டருக்கு மானிய விலை இல்லை?? பயனாளிகளுக்கு ஷாக் கொடுத்த மத்திய அரசு!!
நாடு முழுவதும் அதிரடியாக சரிந்த சிலிண்டர் விலை - 100 ரூபாய்க்கு மேல் குறைந்ததால் பொதுமக்கள் நிம்மதி!!

சமையல் சிலிண்டருக்காக அரசு  கொடுக்கக்கூடிய மானியம், இனி உஜ்வாலா திட்ட பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்றும், மற்றவர்களுக்கு கிடைக்க வாய்ப்பில்லை என தகவல் கிடைத்துள்ளது.

செக் வைத்த அரசு :

இந்தியாவில் சமையல் சிலிண்டர் பயன்படுத்தும் மக்களுக்காக அரசு மானிய உதவி வழங்கி வருகிறது. தற்போது, 14.2 கிலோ எடையுள்ள சமையல் சிலிண்டரின் விலை 1,003 ரூபாயாக உள்ளது. இதற்கு மானியமாக, 200 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இவர்களுக்கான சிலிண்டர் விலை 803 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், கொரோனா பரவலுக்கு பின் மானிய விலை, பொதுமக்களிடம் சரியாக சென்று சேரவில்லை என குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

இது குறித்து பேசிய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங், காலப்போக்கில் மானியங்கள் குறையும் என்றும், அல்லது விரைவில் ரத்து செய்யப்படும் என்றும் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், உஜ்வாலா திட்டத்தின் கீழ் பதிவு செய்த 9 கோடி பயனர்களுக்கு மட்டுமே இனி வரும் காலங்களில் சிலிண்டர் மானியம் கிடைக்கலாம் என்றும், மற்ற  21 கோடி சிலிண்டர் இணைப்பு பெற்ற பயனாளர்கள் சந்தை விலையில் தான் சிலிண்டரை வாங்க வேண்டியிருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் அதற்கான எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here