நாட்டில் சமையல் கேஸ், பெறுவதற்கான டெபாசிட் தொகையை மத்திய அரசு திடீரென உயர்த்தி இருப்பது சாமானிய மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
டெபாசிட் தொகை உயர்வு :
மத்திய அரசு சர்வதேச கச்சா எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து, எரிபொருட்கள் மற்றும் கேஸ் உள்ளிட்டவைகளை பெற்று மானிய விலையில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக, சமையல் மற்றும் வணிகப் பயன்பாட்டுக்கான கேஸ் விலை பன் மடங்கு உயர்ந்துள்ளது. இது சாமானிய மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்த நிலையில், தற்போது சிலிண்டருக்கான டெபாசிட் தொகையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. புதிதாக சமையல் கேஸ் இணைப்பு பெறுபவர்களுக்கான டெபாசிட் தொகை 750 ரூபாயாக உயர்த்தபட்டுள்ளது.
அதேபோல், 14.5 கிலோ எடை கொண்ட சமையல் உருளையின் வைப்புத்தொகை 1450 ஆக இந்த நிலையில் தற்போது இது, 2200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதுமட்டுமில்லாமல் 2 சிலிண்டர்கள் பெறுவோர் இனி 4400 ரூபாய் செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த விதிமுறைகள், புதிதாக சமையல் கேஸ் இணைப்பு பெற விரும்புவோர்களுக்கு பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சாமானிய மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்