இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும் பாஜக எம்.பியுமான கவுதம் காம்பீரின் தொண்டு நிறுவனத்தின் மீது எந்தவித தாமதமும் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டெல்லி உயர் நீதிமன்றத்திடம் மருந்து கட்டுப்பாட்டு ஆணையர் உறுதி உறுதி அளித்துள்ளார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இந்த நிலையில் பலரும் கொரோனாவுக்கு பயன்படும் மருந்துகளை பதுக்கி வைத்து அதை விற்பதாகவும் தகவல்கள் அவ்வப்போது வெளிவந்த வண்ணம் உள்ளன. இதனை தொடர்ந்து பாஜக எம்.பியான கவுதம் காம்பீர் தனது தொண்டு நிறுவனத்தில் ஃபாபிஃப்ளூ என்ற மருந்தை சட்டத்திற்கு புறம்பாக கையிருப்பு வைத்திருந்ததாக புகார் எழுந்தது.
அதனடிப்படையில் மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் விசாரணை மேற்கொண்டதில் அவர் சட்டவிரோதமாக ஃபாபிஃப்ளூ மருந்தை வைத்திருந்ததும் அதனை கொரோனா நோயாளிகளுக்கு வழங்கியதும் தெரிய வந்தது. இதனால் கவுதம் காம்பீரின் தொண்டு நிறுவனத்தின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!