இந்தியாவின், அடுத்த இரண்டு வாரங்களில் கொரோனா வைரஸ் பரவல் மிகவும் தீவிரமாகி நிலைமை கட்டுக்குள் இல்லாமல் போய்விடும் என சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
பகிரங்க எச்சரிக்கை :
இந்தியாவில் கொரோனா வைரஸ் மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதனால், தங்கள் நாட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதை உலக நாடுகள் அதிகப்படுத்தி வருகிறது. மேலும் பண்டிகைகள் உள்ளிட்ட, பல்வேறு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்னும் 2 வாரத்திற்குள் கொரோனா தொற்று மிகவும் தீவிரம் எடுக்க உள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால், நிலைமை கைமீறி போகும் வாய்ப்புகள் உருவாகி உள்ளதாக தெரிவித்துள்ளார்.
உலக நாடுகள், மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதை அதிகரிப்பது மற்றும் பரிசோதனை மேற்கொள்வதை துரிதப்படுத்துவது போன்ற நடவடிக்கைகளால் இந்த பரவலை ஓரளவு கட்டுக்குள் கொண்டுவர முடியுமென ஆலோசனை தெரிவித்துள்ளார். உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி தெரிவித்துள்ள இந்த எச்சரிக்கை மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்