இந்தியாவில் உச்சம் தொடும் கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 3.17 லட்சம் பேருக்கு தொற்று… 491 நபர்கள் இறப்பு!!

0

இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு உச்சம் அடைந்து வந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 3,17,532 நபர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பரவல் உச்சம்:

இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பரவல் உச்சம் தொட்டு வருகிறது. இதனால், 3ம் அலை பரவல் உச்சம் அடைய உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் அண்மையில் தெரிவித்தனர். இந்த நிலையில், நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 3,17,532 நபர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,82,18,773 ஆக உயர்ந்துள்ளது. மேலும், ஒரே நாளில்  491 பேர் இறந்துள்ளதால், இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,87,693 ஆக அதிகரித்துள்ளது.

இது போக, தொற்றில் இருந்து நேற்று ஒரு நாள் மட்டும் 2,23,990 பேர் குணமடைந்திருப்பதால், மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 3,58,07,029ஆக உயர்ந்துள்ளது. நாட்டில், குணமாகியோர் விகிதம் 93.69% ஆகவும், உயிரிழந்தோர் விகிதம் 1.28% ஆக குறைந்துள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும்  இந்தியா முழுவதும், 73,38,592 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here