இந்தியாவில் 7 மாதங்களுக்கு பின் கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா – ஒரே நாளில் 302 பேர் பலியானதால் பொதுமக்கள் பீதி!!

0

இந்தியா முழுவதும் வேகமெடுத்துள்ள கொரோனா வைரஸால் ஒரே நாளில், 1,17,100 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 24 மணி நேரத்தில்  302 பேர் பலியானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலி உயர்வு :

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பரவல் மெல்ல அதிகரிக்க தொடங்கியுள்ளது. கொரோனா 2ம் அலைக்கு பிறகு, மக்கள் கொஞ்சம் சகஜ நிலைக்கு திரும்பி வந்த இந்த நிலையில், தற்போது 3ம் அலை தொடங்கி விட்டதாக அதிகாரிகள் அண்மையில் எச்சரிக்கை விடுத்தனர். அதன்படி, ஒரே நாளில் இந்த வைரஸால் நாடு முழுவதும், 1,17,100 பேர் பாதிக்கப்பட்டுள்ளதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,52,26,386 ஆக உயர்ந்தது. இது போக, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 302 பேர் இறந்துள்ளதால், இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,83,178 ஆக உயர்ந்துள்ளது.

தொற்றில் இருந்து ஒரே நாளில் 30,836 பேர் குணமடைந்துள்ளதாகவும், இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,43,71,845ஆக உயர்ந்துள்ளது. இதுவரை சிகிச்சையில் 3,71,363 பேர் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டில் இதுவரை, 1,49,66,81,156 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தபட்டுள்ளதாகவும்,  நேற்று ஒரே நாளில் மட்டும் 94,47,056 பேருக்கு செலுத்தப்பட்டு  உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், குணமடைந்தோர் விகிதம் 97.57% ஆகவும், இறந்தவர்கள் விகிதம் 1.37% ஆகவும் உள்ளது. மேலும், சிகிச்சை பெறுவோர் விகிதம் 1.05% ஆக குறைந்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here