இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5 லட்சத்தை எட்டும் – ஆராய்ச்சியாளர்கள் பகிர் கணிப்பு!!

0

நம் நாட்டில் அடுத்த மாத இறுதியில் தினசரி கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை தாண்டும் என வாஷிங்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்  கணித்துள்ளனர்.

ஆராய்ச்சியாளர்கள் கணிப்பு  :

இந்தியாவில் கொரோனா வைரஸ் மற்றும் ஓமைக்ரான் வைரஸ் பரவல் தீவிரமாக இருந்து வருகிறது. இதனால், அனைத்து மாநிலங்களிலும், ஊரடங்கு கட்டுப்பாடு மிகவும் கடுமையாகபட்டுள்ளது. இதனால் மாநிலங்களில் உள்ள மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை அந்தந்த மாநில அரசு தீவிரப்படுத்தி வருகிறது. தற்போது வரை, இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு ஒன்றரை லட்சத்தை கடந்து வருகிறது. இந்நிலையில் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் முக்கியமான கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.

இதன்படி இந்தியாவில் அடுத்த மாதம் தினசரி கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை தாண்டும் என்றும், இருந்தாலும் டெல்டா வைரஸை காட்டிலும்  ஓமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் மற்றும் இறப்போர் விகிதம் குறைவாகவே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும், பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here