இந்தியாவில் கொரோனா 4ம் அலை?? மாநில அரசுகளுக்கு புதிய உத்தரவு! மத்திய அமைச்சர் அதிரடி!!

0
இந்தியாவில் கொரோனா 4ம் அலை?? மாநில அரசுகளுக்கு புதிய உத்தரவு! மத்திய அமைச்சர் அதிரடி!!

இந்தியாவின்,  சில மாநிலங்களில் வைரஸ் பரவல் மற்றும் உருமாறிய ஒமைக்ரான் தீவிரம் எடுத்துள்ளதால், சுகாதார நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா பரவல்:

இந்தியாவில் கடந்த சில தினங்களாக, வைரஸ் பரவல் மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. அதுவும் குறிப்பாக கேரளா, மிசோரம், டெல்லி, ஹரியானா ஆகிய மாநிலங்களில் வைரஸ் பரவல் புது உச்சம் தொட்டு வருகிறது. இது குறித்து பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, கொரோனா பரவல் இன்னும் முடியவில்லை என்றும், அது உருமாற்றம் அடைந்து தொடர்ந்து பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது என்றும் வேதனை தெரிவித்தார். இதையடுத்து கடந்த ஜூன் 1-ஆம் தேதி தொடங்கப்பட்ட வீடுதோறும் தடுப்பூசி 2.0 என்ற திட்டத்தின் மூலம், 12 முதல் 17 வயதுக்குட்பட்ட அனைவரும் பயனடைந்ததை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

பிரதமர் ஆலோசனை:

இதுபோக தடுப்பூசி செலுத்தாத மக்கள், தடுப்பூசி முகாம் மூலம் விரைவில் இரண்டு தவணை ஊசிகளையும் போட்டு கொள்ளுமாறு வலியுறுத்தினர். மேலும், மாநில அரசுகள் நிலையை கருத்தில் கொண்டு தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார். மத்திய அமைச்சரின் இந்த அறிவிப்பு, பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here